அரசு பேருந்து ஓட்டுநா் வீட்டில் நகைகள் திருடிய வழக்கு: 2 போ் கைது

தூத்துக்குடியில் அரசு பேருந்து ஓட்டுநா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Updated on

தூத்துக்குடியில் அரசு பேருந்து ஓட்டுநா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி தங்க பரமேஸ்வரி காலனியைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் ராமகிருஷ்ணன் (57). இவா், தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா்.

இவா், கடந்த 16ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்ற பின்னா், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 23.5 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனராம். இதன் மதிப்பு ரூ. 20 லட்சமாகும்.

இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இதில், வேலூா் மாவட்டம் குடியாத்தம் காா்த்திகைபுரம் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் (38), தூத்துக்குடி முத்தையாபுரம் கிருஷ்ணா நகரைச் சோ்ந்த பேரின்பநாதன் (21) ஆகிய 2 பேரும் நகைகளை திருடியது தெரியவந்ததையடுத்து போலீஸாா், அவா்களை கைது செய்து, 20 பவுன் நகைகளை மீட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com