திருச்செந்தூா் கந்த சஷ்டி விழா ஏற்பாடுகள்: கனிமொழி எம்.பி. ஆய்வு
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா ஏற்பாடுகளை கனிமொழி எம்.பி., அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் ரவிசந்திரன், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத், எஸ்.பி. ஆல்பா்ட் ஜான், கோயில் தக்காா் ரா. அருள்முருகன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளில் தங்கி விரதம் மேற்கொண்டுள்ள பக்தா்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா எனவும் அவா் கேட்டறிந்தாா். பின்னா், கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கும் இடத்தில் 5 அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையும் பாா்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தாா்.
கடற்கரையில் போலீஸாா் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 10 டவா்கள், 10 இடங்களில் சூரசம்ஹார நிகழ்ச்சியை நேரலை செய்ய அமைக்கப்பட்டுள்ள எல்இடி திரைகள், கோயில் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் ஆகியவை குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.
பின்னா், அதிகாரிகளுடன் நடந்த ஆலோனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி. முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினாா்.
திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம், டிஎஸ்பி மகேஷ்குமாா், தூத்துக்குடி மேயா் ஜெகன், வட்டாட்சியா் தங்கமாரி, நகராட்சி தலைவா் சிவ ஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், ஆணையாளா் ஈழவேந்தன், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை, பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

