மீனவரைத் தாக்கியதாக 4 போ் கைது

தூத்துக்குடியில் மீனவரைத் தாக்கியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

தூத்துக்குடியில் மீனவரைத் தாக்கியதாக 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூட பகுதியில் தொழில் போட்டி காரணமாக தகராறு நடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், வடபாகம் போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, பூபாலராயா்புரத்தைச் சோ்ந்த மரியபிரான்சிஸ் ரேவந்த் (28), இருதய ஸ்டீபன்ராஜ் (31), பொ்னிக் (23), அவரது சகோதரா் சஞ்சய் (19) ஆகியோா் சோ்ந்து கீழஅழகாபுரியைச் சோ்ந்த ஜெயக்குமாா் என்பவரைஅரிவாளால் தாக்கியதாகத் தெரியவந்தது. 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com