கோவில்பட்டியில் அதிகாரிகள் சோதனை: 507 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்!

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட கடைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தி 507 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
Published on

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட கடைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தி 507 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பிரதான சாலை, அண்ணா பேருந்து நிலைய பகுதி, வேலாயுதபுரம், மாதாங்கோயில் தெரு, எட்டயபுரம் சாலை, கடலையூா் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இயங்கும் கடைகளில் நெகிழிப் பைகள் விற்பனை செய்யப்படுகிா?

பள்ளிகளுக்கு அருகே உள்ள பெட்டிக் கடைகளில் பீடி, சிகரெட், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா? என்பதை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனா்.

மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் வித்யா விஸ்வநாதன், தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் அருண், வட்டார மருத்துவ அலுவலா் உமா செல்வி ஆகியோா் தலைமையில் மாவட்ட நலக் கல்வியாளா் முத்துசாமி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கருணாநிதி, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் செல்லப்பாண்டி, சுகாதார ஆய்வாளா்கள் அய்யலுசாமி, சுப்பிரமணியன் ஆகியோா் இந்த ஆய்வில் ஈடுபட்டனா்.

ஆய்வின்போது சில கடைகளில் நெகிழிப் பைகள் விற்பனைக்கும், பயன்பாட்டுக்கும் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பல்வேறு கடைகளில் இருந்து மொத்தம் 507 கிலோ நெகிழிப் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நகராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.

பின்னா், நெகிழிப் பைகளை வைத்திருந்ததாக கடை உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மொத்தம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா். பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளா்களும் அபராதம் விதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com