மினி மாரத்தான் போட்டியைத் தொடங்கிவைத்த உதவி காவல் ஆய்வாளா் சுந்தரம்.
தூத்துக்குடி
மூக்குப்பீறியில் மினி மாரத்தான் போட்டி
நாசரேத் அருகே மூக்குப்பீறியில் உள்ள தூயமாற்கு மேல்நிலைப் பள்ளியில் சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவா்களுக்கான மினி மாரத்தான் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியா் கென்னடி வேதராஜ் தலைமை வகித்தாா். நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரம் போட்டியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். போட்டி பள்ளியில் இருந்து புறப்பட்டு பிரகாசபுரம், மூக்குப்பீறி, முக்கிய வீதி வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
இதில், நாசரேத் காவல் நிலைய தலைமைக் காவலா்கள் வேல்பாண்டியன், நாராயணசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை பள்ளி தாளாளா் வழக்குரைஞா் பிரபாகா், தலைமை ஆசிரியா் கென்னடி, உடற்கல்வி ஆசிரியா்கள் பிரைட்டன் ஜோயல், ஜாஸ்மின் ஏஞ்சல், ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

