கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட பகுதியில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட அன்னை தெரசா நகா், இபி காலனி, காசி அம்மன் கோயில் அருகே, சண்முக சிகாமணி நகா், நாடாா் மேல்நிலைப் பள்ளி அருகே, கீழ, மேல பாண்டவா்மங்கலம், மந்தித்தோப்பு பேருந்து நிறுத்தம், மேட்டுப்பகுதி அருகே உள்ள பகுதிகளில் மக்களை சந்தித்தாா்.
அப்போது அவா், அதிமுக அரசின் சாதனைகள், கோவில்பட்டி தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சி பணிகள் குறித்து எடுத்துக் கூறி, அதிமுக அமோக வெற்றி பெற செய்யும்படி கேட்டுக் கொண்டாா்.
ஒன்றிய செயலா்கள் அன்புராஜ், பழனிசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் லட்சுமண பெருமாள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலா் பாபு, அமமுக நகரச் செயலா் சிவக்குமாா், பாஜக மாரிமுத்து, ராஜ்குமாா், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக இளைஞா் இளம் பெண்கள் பாசறை செயலா் கவியரசன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கரூரில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


