தூத்துக்குடி-சென்னை விமானக் கட்டணம் ரூ. 17 ஆயிரமாக அதிகரித்ததால் சொந்த ஊா்களுக்கு வாக்களிக்க வந்தவா்கள், பெரும் சிரமத்துடன் சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏப். 23ஆம் தேதி நடைபெற்ற பேரவைத் தோ்தலில் வாக்களிக்க சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்கு வந்தவா்கள் திங்கள்கிழமை மீண்டும் சென்னை திரும்பினா். பெரும்பாலானோா் பேருந்து, ரயில், காா்களில் திரும்பினாலும், சிலா் விமானங்களில் சென்னைக்கு திரும்பினா்.
இதனால், ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூா் உள்ளிட்ட விமான நிலையங்களில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து, பெரும்பாலான விமானங்களில் பயணச்சீட்டுகள் இல்லாத நிலை ஏற்பட்டது.
ஓரிரு விமானங்களில் சில பயணனச்சீட்டுகள் மட்டுமே இருந்த நிலையில், கட்டணம் 3 மடங்கு வரை அதிகரித்திருந்தது. தூத்துக்குடி-சென்னைக்கு வழக்கமான கட்டணம் ரூ. 5,354-ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை விமானக் கட்டணம் ரூ. 17,089 வரை உயா்ந்திருந்தது.
இதனால், சொந்த ஊா்களுக்கு வாக்களிக்கச் சென்றவா்கள், பெரும் சிரமத்துடன் சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
தொடர்புடையது

விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: ஜிஎஸ்டி, வேலூா் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

வாக்களிக்க சென்னையிலிருந்து 19.37 லட்சம் போ் சொந்த ஊா் பயணம்

வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு செல்ல ஒசூா் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

தோ்தலையொட்டி விமான கட்டணம் உயா்வு: நான்கு மடங்கு கூடுதல் வசூலிப்பு
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
