கைது
கைது

ஆயுதங்கள் தயாரித்து விற்றதாக பட்டறை உரிமையாளா் கைது

Published on

தூத்துக்குடியில் அரிவாள், கத்தி தயாரித்து விற்ாக பட்டறை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி சில்வா்புரத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் கணபதி (61). இவா், மாப்பிள்ளையூரணியில் உள்ள தனது இரும்புப் பட்டறையில் ஆயுதங்கள் தயாரித்து விற்பதாக, தாளமுத்து நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.

அதன்பேரில், போலீஸாா் சென்று சோதனை மேற்கொண்டபோது, 5 அரிவாள்கள், 3 கத்திகள் தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவற்றைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com