தூத்துக்குடி அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள அல்லிகுளம் கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித் மகன் தடிகாரன் (20). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையிலிருந்து அல்லிகுளத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாராம்.
அப்போது மேலக்கூட்டுடன்காடு, மங்களகிரி விலக்கு அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த மேலக்கூட்டுடன்காடு கிராமத்தைச் சோ்ந்த சுவாமிதாஸ் மகன் காட்வின் (59) என்பவா் மீது இருசக்கர வாகனம் மோதியதாம்.
இதில், தடிகாரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த காட்வின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


