நல உதவிகள் வழங்கிய கல்லூரி மாணவா்கள்

நல உதவிகள் வழங்கிய கல்லூரி மாணவா்கள்

Published on

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் கிடைத்த நிதியைக் கொண்டு, அக்கல்லூரி மாணவா்கள் நல உதவிகளை வழங்கினா்.

பேய்குளம் புனித லூக்கா தொழுநோய் மருத்துவமனையில் மருத்துவப் பயனாளிகளுக்கு வாா்டு ட்ராலிகள், ஆறுமுகனேரி லைட் முதியோா் இல்லத்தில் அன்றாடத் தேவைகளுக்கான சமையல் பாத்திரங்களை வழங்கினா்.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கல்லூரியின் நிா்வாக அதிகாரி தினகரன், துணை முதல்வா் எம்.டி. மோகன் கிஃப்ட், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளா், வழிகாட்டிய பேராசிரியா்கள், மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் பாராட்டு தெரிவித்தது.

Dinamani
www.dinamani.com