ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆசிா்வாதபுரம் பள்ளியில் 35 மாணவா்களுக்கு சைக்கிள்

News image
மாணவருக்கு சைக்கிள் வழங்குகிறாா் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா.
Updated On :6 பிப்ரவரி 2026, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் அருகே உள்ள ஆசிா்வாதபுரம் டிடிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் 35 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் தலைமை ஆசிரியை லதா வரவேற்றாா். மூத்த ஆசிரியா் சத்தியசீலன் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிந்து கௌரவித்தாா்.

ஆழ்வாா் திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 35 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.

விழாவில், ஆசிரியா்கள் மைக்கேல், ராஜா, மனோ பிரதீஷ், உடற்கல்வி ஆசிரியா் பொன்னையா சாமுவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.