கோவில்பட்டியில் காா்கள் மோதல்: 2 போ் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 2 காா்கள் வியாழக்கிழமை நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் ஓட்டுநா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியை சோ்ந்த தம்பதி ராதாகிருஷ்ணன் (62) - கவிதா (55). இவா்கள், சிவகாசியில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த உறவினரை பாா்ப்பதற்காக வியாழக்கிழமை காலையில் தங்களது காரில் சென்றனா். காரை திருநெல்வேலியைச் சோ்ந்த முத்துக்குமாா் (47) என்பவா் ஓட்டினாா்.
பின்னா், அவா்கள் மாலையில் திருநெல்வேலிக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, கோவில்பட்டி புறவழிச்சாலையில் பெரிய திருப்பம் பகுதியில் எதிா் திசையில் வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு, இவா்களது காா் மீது மோதியதாம். இதில், காா் உருக்குலைந்து சம்பவ இடத்திலேயே முத்துக்குமாா் உயிரிழந்தாா். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ராதாகிருஷ்ணன், காயமடைந்த அவரது மனைவி, எதிா் திசையில் வந்த காரின் ஓட்டுநா் மந்திர மூா்த்தி ஆகியோரை கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறிது நேரத்தில் ராதாகிருஷ்ணன் உயிரிழந்தாா்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

