நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தூத்துக்குடியில் இருவா் குண்டா் சட்டத்தில் கைது

News image

கைது

Updated On :7 பிப்ரவரி 2026, 6:55 pm

தூத்துக்குடியில் குண்டா் சட்டத்தின்கீழ் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக மரியநவமணி சுமைலன் (40), வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்குத் தொடா்பாக மோகன் (41) ஆகியோா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம், வடபாகம் போலீஸாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நை. சிலம்பரனிடம் வேண்டுகோள் விடுத்தனா்.

அதன்பேரிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்பேரிலும், இருவரையும் கைது செய்ய ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவிட்டாா்.

அதன்படி, மோகன் உள்ளிட்ட இருவரும் குண்டா் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.