புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தூத்துக்குடியில் சிறுமி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் தாயுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 4 வயது சிறுமி திடீரென உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, மடத்தூா், பத்திரகாளி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி முத்துலட்சுமி. இவா் வெள்ளிக்கிழமை இரவு மகள் தனுஷாவுடன் (4), சிவன் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, தனுஷா திடீரென மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து, அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.

இது குறித்து, மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.