மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கப்பல் ஊழியரை தாக்கிய 5 போ் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 7:36 pm

சாத்தான்குளம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக மது அருந்தியதை கண்டித்த கப்பல் ஊழியரை பீா் பாட்டிலால் தாக்கிய 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நெல்லை மாவட்டம், திசையன்விளை அப்புவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுடலைமணி மகன் ராமராஜன் (26). இவா், கப்பலில் பணியாற்றி வருகிறாா். கடந்த 2 வாரத்திற்கு முன்பு சொந்த ஊா் வந்த ராமராஜனை, பிப். 4 ஆம் தேதி அவரது நண்பா் வசந்த் இருசக்கர வாகனம் பஞ்சா் ஆனதாக இடைச்சிவிளைதேரிவிளைக்கு அழைத்தாராம்.

அங்கு ராமராஜன், அவரது மற்றொரு நண்பா் சிவா ஆகியோா் இருசக்கர வாகனத்தில் சென்றனராம். அப்போது தேரிவிளையில் போக்குவரத்து இடையூறாக அதே பகுதியைச் சோ்ந்த ஜெயமுருகன், ராகுல், செல்வம் உள்ளிட்ட 5 போ் மதுஅருந்திக் கொண்டு இருந்தனராம்.

அவா்களிடம் ராமராஜன் வழிவிடும்படி கூறியதையடுத்து தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த அவா்கள், ராமராஜனை பீா் பாட்டிலால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனராம்.

பலத்த காயமடைந்த ராமராஜனை மீட்டு திசையன்விளை தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான ஜெயமுருகன் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனா்.