தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காா் மீது பைக் மோதல்

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 6:37 pm

தட்டாா்மடம் அருகே காா் மீது இருசக்கர வாகனம் மோதியது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகா் மனைவி விஜயாதேவி (45). பா்னிச்சா் கடை நடத்தி வருகிறாா். சொந்த ஊரான சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்தில் உள்ள கோயில் திருவிழாவுக்காக பிரபாகா், அவரது குடும்பத்தினா் காரில் வந்தனராம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை விஜயாதேவி பரமன்குறிச்சிக்கு காரில் சென்றாராம். அப்போது படுக்கப்பத்து பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் வெங்கடேஷ் என்பவா் மதுபோதையில் ஓட்டிவந்த இருசக்கர வாகனம், காா் மீது மோதியதாம்.

இதில் காா் சேதமானது. இதுகுறித்த புகாரின்பேரில் தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் விஜயலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.