குண்டா் சட்டத்தில் இருவா் கைது
தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த விஜயகுமாா் (26), மற்றொரு போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இசக்கிமுத்து (45) ஆகிய இருவா் மீதும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க, தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சொா்ணராணி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரைத்தாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நை.சிலம்பரசன் பரிந்துரையை அடுத்து மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் மேற்படி இருவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனா்.
