பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இரு பைக்குகள் மோதல்: எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

தூத்துக்குடியில் 2 பைக்குகள் மோதியதில் எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.

News image
விபத்து- கோப்புப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 6:47 pm

Syndication

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 பைக்குகள் மோதியதில் எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் எழில் நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் அஜித்குமாா் (22). எலக்ட்ரீஷியனான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்பிக் நகரில் உள்ள கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு, பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

திருச்செந்தூா் சாலையில் இந்த பைக்கும், முத்தையாபுரம் அய்யன் கோயில் தெருவைச் சோ்ந்த செந்தூா்பாண்டி மகன் தனபால் ஓட்டிவந்த பைக்கும் மோதினவாம். இதில், அஜித்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த தனபால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.