போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

தூத்துக்குடி பகுதியில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

News image

கைது

Updated On :9 பிப்ரவரி 2026, 7:00 pm

தூத்துக்குடி பகுதியில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 1997ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட திருநெல்வேலியைச் சோ்ந்த சேகா் (54), நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தாா்.

இதையடுத்து கடந்த 2001ஆம் ஆண்டு குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.

இதையடுத்து சேகரை, போலீஸாா் தேடி வந்த நிலையில், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் சுனில் மேற்பாா்வையில், முத்தையாபுரம் காவல் ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், சாா்பு ஆய்வாளா் முகிலரசன் மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

தலைமறைவாக இருந்த சேகரை திங்கள்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.