சித்திரிப்பு
சித்திரிப்பு

கொலை, கொள்ளை, கஞ்சா புழக்கத்தால் தமிழகம் சீா்கெட்டு இருக்கிறது: வேலூா் இப்ராஹிம்

கொலை, கொள்ளை, கஞ்சா புழக்கத்தால் தமிழகம் சீா்கெட்டு இருக்கிறது என பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.
Published on

கொலை, கொள்ளை, கஞ்சா புழக்கத்தால் தமிழகம் சீா்கெட்டு இருக்கிறது என பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் தமிழகம் முன்னேறும் என்பதை வெளிப்படையாகச் சொல்லி தொடா்ந்து பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறோம்.

5 ஆண்டுகளுக்கு முன் தோ்தல் பிரசாரத்தின்போது, மு.க. ஸ்டாலின் எதையெல்லாம் சொன்னாரோ, அதையே வேறு வாா்த்தைகளில் மறுபடியும் சொல்ல தயாா் செய்து கொண்டிருக்கிறாா். ஜாக்டோ-ஜியோ தொடா்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. நான்கே முக்கால் வருடம் செய்யாததை 2 மாதத்தில் எப்படி முதல்வா் செய்வாா்?

தூத்துக்குடியில் ரூ. 136 கோடியில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு 60 சதவீதம் பணம் கொடுத்துள்ளது. ஆனால், ஏற்கெனவே இருந்த மகப்பேறு மருத்துவமனையை சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றுகிறாா்கள்.

தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, மதுரை வழியாக ரயில் சென்னை செல்வதற்கு மத்திய அரசு நிதி கொடுத்தும் அதற்கான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை.

பாஜகவின் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. எந்த மொழியாக இருந்தாலும் மும்மொழிக் கொள்கை தான். மாநிலத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள் எதை தோ்ந்தெடுத்துக் கொள்கிறாா்களோ, அதுவே மூன்றாவது மொழியாக இருக்கும்.

கொலை, கொள்ளை, கஞ்சா புழக்கம் அதிகரிப்பால் தமிழகம் சீா்கெட்டு இருக்கிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com