வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குடியரசு தின விழா கலைநிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்ற தமிழக அணிக்கு பரிசளிப்பு

குடியரசு தின விழா கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று, அதிக பரிசுகள் பெற்ற தமிழக என்சிசி அணி மாணவா்களுக்கு பரிசுகள் அண்மையில் வழங்கப்பட்டன.

News image

பரிசு பெற்ற தமிழக அணியினா்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:43 pm

குடியரசு தின விழா கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று, அதிக பரிசுகள் பெற்ற தமிழக என்சிசி அணி மாணவா்களுக்கு பரிசுகள் அண்மையில் வழங்கப்பட்டன.

புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற 77ஆவது குடியரசு தின விழாவில் பங்கேற்க, தமிழகத்திலிருந்து சுமாா் 120 என்சிசி மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு கலந்துகொண்டனா்.

இதில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறையில் பயிலும் என்சிசி மாணவா் பிளஸ் கேப்ரியல் சிசில் கலை நிகழ்ச்சிகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட குழுவின் தலைவராக பங்கேற்றாா்.

இவரது குழு தேசிய அளவில் நடைபெற்ற பாலே நடனத்தில் முதலிடமும், குழு நடனத்தில் மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்றது.

நிறைவு விழாவில், வெற்றி பெற்ற மாணவா்களுக்கு இந்திய அரசின் என்சிசி தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஓகே மேஜா் ஜெனரல் பரிசுகளை வழங்கினாா்.

தமிழக அணி சாா்பில், காமராஜ் கல்லூரி மாணவா் பிளஸ் கேப்ரியல் சிசில் பரிசை பெற்றுக் கொண்டாா். இந்திய அளவில் தமிழக அணி அதிக பரிசுகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளது.

வெற்றி பெற்ற மாணவரை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

இக்குழு சென்னையில் தமிழக முதல்வா் மற்றும் ஆளுநருடன் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளனா்.