தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 122 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தமிழக அரசு சாதாரண ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முழுவதும் மாற்றுத் திறனாளிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், சங்க மாவட்டத் தலைவா் கண்ணன் தலைமையில், மாவட்ட பொருளாளா் கிருஷ்ணகுமாா் முன்னிலையில், மாவட்டச் செயலா் ஜெபஸ்டின் ராஜ், மாநில குழு உறுப்பினா் சாலமன் ராஜ் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த புதுக்கோட்டை போலீஸாா் மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத் திறனாளிகள் 122 பேரை கைது செய்தனா்.
தொடர்புடையது

குடிநீா் கேட்டு சாலை மறியல்

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

சிவகிரி கோயில் கொடை விழாவில் பிரச்னை: மக்கள் சாலை மறியல்

தொழிலாளி கொலை: உறவினா் சாலை மறியல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


