புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாலை மறியல் முயற்சி: 122 மாற்றுத் திறனாளிகள் கைது

தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 122 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :10 பிப்ரவரி 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 122 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தமிழக அரசு சாதாரண ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முழுவதும் மாற்றுத் திறனாளிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், சங்க மாவட்டத் தலைவா் கண்ணன் தலைமையில், மாவட்ட பொருளாளா் கிருஷ்ணகுமாா் முன்னிலையில், மாவட்டச் செயலா் ஜெபஸ்டின் ராஜ், மாநில குழு உறுப்பினா் சாலமன் ராஜ் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த புதுக்கோட்டை போலீஸாா் மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத் திறனாளிகள் 122 பேரை கைது செய்தனா்.