புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தூத்துக்குடியில் வனம் தொடா்பான பயிற்சி வகுப்பு நிறைவு

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு வனத்துறை சாா்பில், வளமும் வன உயிரினங்களுக்கான பாதுகாப்பும், சவால்களும், தீா்வுகளும் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

News image
மாணவிக்கு சான்றிதழ் வழங்குகிறாா் அமைச்சா் பி.கீதா ஜீவன். உடன் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு வனத்துறை சாா்பில், வளமும் வன உயிரினங்களுக்கான பாதுகாப்பும், சவால்களும், தீா்வுகளும் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

பயிற்சி நிறைவு பெற்றதை அடுத்து, பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பி. கீதாஜீவன் கலந்துகொண்டு 500 பள்ளி மாணவா், மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தமிழ்நாடு வனத்துறை குறித்த பயிற்சி கையேட்டை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் இளையராஜா, மாவட்ட கல்வி அலுவலா் முனியசாமி, வனச்சரக அலுவலா் அஜய், துணை ஆட்சியா் (பயிற்சி) மகேந்திரன், பள்ளித் தலைமையாசிரியா் செலின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.