தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பெண் குழந்தைகள் தின போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெற்றவா்களுடன் அமைச்சா் பி.கீதாஜீவன். உடன், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:35 pm

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் பிரேமலதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) உலகநாதன், துணை ஆட்சியா் (பயிற்சி) மகேந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அனுசியா உள்பட பலா் கலந்துகொண்டனா்.