பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெற்றவா்களுடன் அமைச்சா் பி.கீதாஜீவன். உடன், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்.
தூத்துக்குடி
பெண் குழந்தைகள் தின போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் பிரேமலதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) உலகநாதன், துணை ஆட்சியா் (பயிற்சி) மகேந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அனுசியா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

