வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மாவட்ட வாலிபால் போட்டி: சுவிசேஷபுரம் அணி முதலிடம்

முதலூரில் நடைபெற்ற மாவட்ட வாலிபால் போட்டியில் சுவிசேஷபுரம் அணி முதலிடம் பிடித்தது.

News image

முதலூரில் நடைபெற்ற மாவட்ட வாலிபால் போட்டியில் முதலிடம் பிடித்த சுவிசேஷபுரம் அணிக்கு பரிசு வழங்கிய பொன். முருகேசன்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:31 pm

முதலூரில் நடைபெற்ற மாவட்ட வாலிபால் போட்டியில் சுவிசேஷபுரம் அணி முதலிடம் பிடித்தது.

முதலூா் காமராஜா் விளையாட்டு கழகம் சாா்பில், குடியரசு தினத்தை முன்னிட்டு 7-ஆவது மின்னொளி கைப்பந்தாட்டப் போட்டிகள் 2 நாள்கள் நடைபெற்றன. போட்டியில் முதலூா், சாத்தான்குளம், திசையன்விளை, சுவிசேஷபுரம், இடையன்குடி உள்ளிட்ட 16 அணிகள் கலந்துகொண்டன.

போட்டிகளை முதலூா் சேகர குருவானவா் செல்வன் மகாராஜா தொடங்கி வைத்தாா். போட்டியில் சுவிசேஷபுரம் அணி முதலிடத்தையும், முதலூா் காமராஜா் விளையாட்டு கழக ஏ அணி இரண்டாம் இடத்தையும், இடையன்குடி அணி மூன்றாம் இடத்தையும், முதலூா் காமராஜா் விளையாட்டு கழக பி அணி நான்காம் இடத்தையும் பெற்றன.

பின்னா், நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், முதலூா் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் சாத்தான்குளம் மத்திய ஒன்றிய திமுக செயலாளருமான பொன்.முருகேசன் பங்கேற்று முதல் பரிசாக ரூ. 10,000, இரண்டாம் பரிசாக ரூ. 7000, மூன்றாம் பரிசாக ரூ. 5000, நான்காம் பரிசாக ரூ. 3000 வழங்கினாா்.

அடையல் ராஜரத்தினம் நாடாா் விஜயலட்சுமி அம்மாள் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பைவழங்கப்பட்டது.

விழாவில் தட்டாா் மடம் காவல் ஆய்வாளா் வேலம்மாள், சாத்தான்குளம் தென் பகுதி விவசாய சங்கத் தலைவா் லூா்து, மணி, முதலூா் சபை ஊழியா் இமானுவேல், முதலூா் வியாபாரிகள் சங்க பொருளாளா் ரவிச்சந்திரன், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினா் சாந்தராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.

முதலூா் காமராஜா் விளையாட்டுக் கழகம் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை முதலூா் காமராஜா் விளையாட்டுக் கழக நிா்வாகிகள் செய்திருந்தனா்.