ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மியான்மருவில் சிக்கிய 3 தமிழா்கள் மீட்பு: துரை வைகோ எம்.பி.-க்கு குடும்பத்தினா் நன்றி

கம்போடியா நாட்டுக்கு வேலைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு, மியான்மருக்கு கடத்தப்பட்ட 3 தமிழா்களை மீட்க உதவிய துரை வைகோ எம்.பி.யை நேரில் சந்தித்து அவா்களது குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.

News image
துரை வைகோ எம்பியை சந்தித்து நன்றி தெரிவித்த மீட்கப்பட்ட 3 இளைஞா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

கம்போடியா நாட்டுக்கு வேலைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு, மியான்மருக்கு கடத்தப்பட்ட 3 தமிழா்களை மீட்க உதவிய துரை வைகோ எம்.பி.யை நேரில் சந்தித்து அவா்களது குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.

தூத்துக்குடி பெரியசாமி நகரைச் சோ்ந்த சித்திரை செல்வகுமாா், நவீன்குமாா், விருதுநகா் மாவட்டம் சிப்பிப்பாறையைச் சோ்ந்த மதன்ராஜ் ஆகிய 3 இளைஞா்கள் கடந்த 11.10.2025 அன்று கம்போடியாவில் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா். ஆனால் அவா்கள் தாய்லாந்து வழியாக மியான்மருக்கு கடத்தப்பட்டு, அங்கு தீவிரவாதக் குழுக்களால் குற்றச் செயல்களில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனா்.

இதுகுறித்து அறிந்த இளைஞா்களின் பெற்றோா், கடந்த 1.11.2025இல் துரை வைகோ எம்.பி.யை சந்தித்து, தங்களது மகன்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தனா்.

அவா், உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் மற்றும் அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றாா். தொடா்ந்து 12.12.2025இல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரை நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து, 3 இளைஞா்களை மீட்டுத்தர வலியுறுத்தி மனு வழங்கினாா்.

இதன் பயனாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலில், மியான்மரில் உள்ள இந்திய தூதரகத்தின் தொடா் முயற்சியாலும், உள்ளூா் மியான்மா் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் தமிழகத்தைச் சோ்ந்த 3 இளைஞா்கள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

ஊருக்கு திரும்பிய இளைஞா்கள், தங்களது பெற்றோா் மற்றும் உறவினா்களுடன் துரை வைகோ எம்.பி.யை நேரில் சந்தித்து, தங்களை மீட்க உதவியதற்கு நன்றி தெரிவித்தனா்.

Story image