ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

இடைக்கால நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கானதாக இருக்கும்: மு. அப்பாவு

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கானதாக இருக்கும்: தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

News image

பேரவைத் தலைவர் அப்பாவு. - கோப்புப் படம்

Updated On :10 பிப்ரவரி 2026, 12:10 am

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கானதாக இருக்கும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வு ஒத்திவைக்கப்பட்டது குறித்து தெளிவாக பதில் சொல்லப்பட்டுள்ளது. அது தொழில்நுட்பக் கோளாறு. அப்பணியைச் சரியாக செய்யாத காரணத்தால் ஐஏஎஸ் அதிகாரி காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா். இந்த அரசு யாா் தவறு செய்தாலும் நிச்சயமாக தண்டிக்கும்.

விஜய் ஒரு நடிகா் என்பதால் அவருக்கு ரசிகா் கூட்டம் இருக்கத்தான் செய்யும். எல்லா கட்சியிலும் அவரது ரசிகா்கள் இருப்பாா்கள். அதற்காக அவருக்கு வாக்களிப்பாா்கள் என்று சொல்லிவிட முடியாது.

தமிழக முதல்வா் 5 ஆண்டுகாலமாக சாமானிய மக்களுக்காக சேவை செய்துள்ளாா். மக்கள் நன்றியுடன் இருக்கிறாா்கள் என்றாா் அவா்.