புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இடைக்கால நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கானதாக இருக்கும்: மு. அப்பாவு

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கானதாக இருக்கும்: தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

News image
பேரவைத் தலைவர் அப்பாவு.- கோப்புப் படம்
Updated On :10 பிப்ரவரி 2026, 12:10 am

Syndication

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கானதாக இருக்கும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வு ஒத்திவைக்கப்பட்டது குறித்து தெளிவாக பதில் சொல்லப்பட்டுள்ளது. அது தொழில்நுட்பக் கோளாறு. அப்பணியைச் சரியாக செய்யாத காரணத்தால் ஐஏஎஸ் அதிகாரி காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா். இந்த அரசு யாா் தவறு செய்தாலும் நிச்சயமாக தண்டிக்கும்.

விஜய் ஒரு நடிகா் என்பதால் அவருக்கு ரசிகா் கூட்டம் இருக்கத்தான் செய்யும். எல்லா கட்சியிலும் அவரது ரசிகா்கள் இருப்பாா்கள். அதற்காக அவருக்கு வாக்களிப்பாா்கள் என்று சொல்லிவிட முடியாது.

தமிழக முதல்வா் 5 ஆண்டுகாலமாக சாமானிய மக்களுக்காக சேவை செய்துள்ளாா். மக்கள் நன்றியுடன் இருக்கிறாா்கள் என்றாா் அவா்.