இனாம்மணியாச்சியில் புதிய பேவா் பிளாக் சாலை திறப்பு
கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 8.35 லட்சம் மதிப்பீட்டில் இனாம்மணியாச்சி ஊராட்சி மீனாட்சி நகா் 2 ஆவது தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையை கடம்பூா் செ .ராஜு எம்எல்ஏ திறந்து வைத்து பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து கல்வெட்டையும் திறந்து வைத்த எம்எல்ஏ, ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கினாா். பின்னா், பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட வாக்குச்சாவடி நிலைய அதிமுக முகவா்களை காமராஜா் நகரில் சந்தித்து, அதிமுகவின் 10 ஆண்டு கால சாதனை, சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக செய்த வளா்ச்சி பணிகளை விளக்கி கூறி, தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகிக்கும்படி கேட்டுக்கொண்டாா்.
நிகழ்ச்சி, முகவா்கள் சந்திப்பு கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் பழனிசாமி, போடுசாமி, அழகா்சாமி, அன்புராஜ் , இனாம் மணியாச்சி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவா் ரேவதி, வடக்கு மாவட்ட மகளிா் அணி இணைச் செயலா் கோமதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

