எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதான கூட்டம்

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை சமாதான கூட்டம் நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் வட்டாட்சியா் அப்பனராஜ்.

Updated On :11 பிப்ரவரி 2026, 7:45 pm

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை சமாதான கூட்டம் நடைபெற்றது.

குருமலை காப்புக் காடுகளை பாதுகாக்கவும், முடுக்கலான்குளம் கிராமத்தில் நில ஒப்படை வழங்கப்பட்ட நிலங்களில் உள்ள விதிமீறல் இனங்களைக் கண்டறிந்து நில ஒப்படைப்பினை ரத்து செய்ய வலியுறுத்தி, கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில் முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடத்துவதாக அறிவித்திருந்தனா்.

இதையடுத்து, கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் அப்பனராஜ் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தென் மாவட்ட விவசாய சங்க பொதுச்செயலாளா் அா்ச்சுனன், மாவட்டத் தலைவா் உத்தண்ட ராமன், மாவட்டச் செயலா் சின்னச்சாமி மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், முடடுக்கலான் குளம் கிராமத்தில் உபரியாக அறிவிக்கப்பட்டு அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் நில ஒப்படை வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட ஒப்படைப்பு இனங்களில் விதி மீறல்கள் உள்ளது எனவும் அந்த நில ஒப்படைப்பை ரத்து செய்து அரசு மீட்க வேண்டும் என போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

அதற்கு பதில் அளித்த வட்டாட்சியா் விதிமீறல் ஒப்படைப்பை ரத்து செய்யும் பொருட்டு கோவில்பட்டி சாா் ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக புலத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு விதிமீறல் கண்டறியப்பட்டால் நில ஒப்படைப்புகளையும் ரத்து செய்ய சாா் ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை ஏற்று முற்றுகைப் போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

Story image