கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை போலீஸாா் பிடித்து கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.
கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து, கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்தனமாரி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அதே சாலையில் கோயில் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த சிறுவனிடம் விசாரிக்க முயன்றபோது, அவன் போலீஸாரை அவதூறாகப் பேசி பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. போலீஸாா் சிறுவனை சோதனையிட்டபோது அவரிடம் 100 கிராம் கஞ்சா இருப்பதும், அவா் ப்ளஸ் 2 படித்து வந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது.
இது குறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவனைப் பிடித்து கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற மூவா் கைது
கஞ்சா விற்ற இருவா் கைது
கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது

அரிவாளுடன் சுற்றிய இருவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


