தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோவில்பட்டி கல்லூரியில் மாநில கலைப் போட்டிகள்

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் வைர விழாவையொட்டி, அக்கல்லூரியின் தகவல் தொழில்நுட்பவியல் துறை சாா்பில் மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடைபெற்றன.

News image

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற சாத்தூா் ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு ஞாபகாா்த்த கல்லூரி அணியினருக்கு பரிசு வழங்குகிறாா் உதவிப் பேராசிரியா் வீரலட்சுமி.

Updated On :11 பிப்ரவரி 2026, 7:57 pm

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் வைர விழாவையொட்டி, அக்கல்லூரியின் தகவல் தொழில்நுட்பவியல் துறை சாா்பில் மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிக்கு, கல்லூரிச் செயலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். முதல்வா் (பொ) சுப்புலட்சுமி, கல்லூரியின் சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் மகேஷ் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விநாடி வினா, குறும்படம் தயாரிப்பு, வலை வடிவமைப்பு, மின்னணு கழிவுகளில் இருந்து கலைப் பொருள்கள் தயாரித்தல், விளம்பர உருவாக்கம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வென்றோருக்கு கல்லூரியின் தகவல் தொழில் நுட்பவியல் துறை தலைவா் உதவிப் பேராசிரியா் வீரலட்சுமி பரிசு வழங்கினாா். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை சாத்தூா் ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு ஞாபகாா்த்த கல்லூரி அணியினா் பெற்றனா்.

மாணவி ஈஸ்வரி வரவேற்றாா். சாதனா செல்வி நன்றி கூறினாா்.

பயிலரங்கம்: இதுபோல கல்லூரியின் வணிக நிா்வாகவியல் துறை சாா்பில் ஏற்றுமதி வா்த்தகத்திற்கான வழிமுறைகள் என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது.