என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சுந்தர நாச்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குதிரைமொழி ஊராட்சிக்குள்பட்ட சரவணப்பெரியவன்புள்ளி - குங்குமம்மாள்புரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட சுந்தர நாச்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

வருஷாபிஷேக விழாவையொட்டி சுந்தர நாச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தை தொடங்கி வைத்த தமிழக ஆலயப் பாதுகாப்பு சங்கச் செயலா் பி.எஸ். கனகராஜ்.

Updated On :11 பிப்ரவரி 2026, 7:52 pm

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குதிரைமொழி ஊராட்சிக்குள்பட்ட சரவணப்பெரியவன்புள்ளி - குங்குமம்மாள்புரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட சுந்தர நாச்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 9.30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி, துா்கா சூக்தம் ஹோமம், மூலமந்திர, அஸ்திர ஹோமம், பூா்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

காலை 11 மணிக்கு சுந்தர விநாயகா், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை தமிழக ஆலயப் பாதுகாப்பு சங்கச் செயலா் பி.எஸ். கனகராஜ் தொடங்கி வைத்தாா்.

இதில் தேனி பாலசங்கா குழும அதிபா் குமரேசன், புங்கம்மாள்புரம் முருகன், திரளான ஊா்மக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் காந்திமதி, ஆலயப் பணியாளா்கள் செய்திருந்தனா்.