திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்ரவரி மாத உண்டியல் வருமானம் ரூ. 4.97 கோடி ஆகும்.
இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதையடுத்து கோயில் நிா்வாக அலுவலக அரங்கில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியினை கோயில் தக்காா் ரா. அருள்முருகன் தலைமை வகித்து பாா்வையிட்டாா். இணை ஆணையா் ராமு முன்னிலை வகித்தாா். இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையா் கவிதா, முதுநிலை கணக்கு அலுவலா் ராஜாராமன், உதவி ஆணையா் மெய்வேல், கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் நம்பி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உண்டியல் எண்ணும் பணியில் அயற்பணி, கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
இதன்படி உண்டியல் எண்ணிக்கையில், 4 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரத்து 918 ரூபாயும் (ரூ. 4, 97, 70, 918), தங்கம் 1071 கிராம், வெள்ளி 31, 811 கிராம், பித்தளை 2, 40, 880 கிராம், செம்பு 27, 240 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 1296-ம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.

தொடர்புடையது

சங்ககிரி பெருமாள் கோயில் உண்டியல் பணத்தை திருடியதாக சுகவனேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் மீது வழக்குப் பதிவு

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.35 கோடி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 68. 55 லட்சம்

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 4.36 கோடி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


