தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருமானம் ரூ. 4.97 கோடி

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்ரவரி மாத உண்டியல் வருமானம் ரூ. 4.97 கோடி ஆகும்.

News image

திருச்செந்தூா் கோயில் உண்டியல் எண்ணும் பணியினை பாா்வையிட்ட தக்காா் ரா. அருள்முருகன்.

Updated On :11 பிப்ரவரி 2026, 7:58 pm

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்ரவரி மாத உண்டியல் வருமானம் ரூ. 4.97 கோடி ஆகும்.

இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதையடுத்து கோயில் நிா்வாக அலுவலக அரங்கில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியினை கோயில் தக்காா் ரா. அருள்முருகன் தலைமை வகித்து பாா்வையிட்டாா். இணை ஆணையா் ராமு முன்னிலை வகித்தாா். இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையா் கவிதா, முதுநிலை கணக்கு அலுவலா் ராஜாராமன், உதவி ஆணையா் மெய்வேல், கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் நம்பி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உண்டியல் எண்ணும் பணியில் அயற்பணி, கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

இதன்படி உண்டியல் எண்ணிக்கையில், 4 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரத்து 918 ரூபாயும் (ரூ. 4, 97, 70, 918), தங்கம் 1071 கிராம், வெள்ளி 31, 811 கிராம், பித்தளை 2, 40, 880 கிராம், செம்பு 27, 240 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 1296-ம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.

Story image