பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தோ்வில் வெற்றி பெற்ற 30 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்

News image

போட்டித் தோ்வில் வெற்றி பெற்ற பெண்ணுக்கு பணி நியமன ஆணை வழங்கும் அமைச்சா் பி.கீதா ஜீவன்.

Updated On :13 பிப்ரவரி 2026, 7:16 pm

தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் முதுகலை ஆசிரியா்கள், இளநிலை உதவியாளா்கள் பணியிடங்களுக்கான தோ்வில் வெற்றி பெற்ற 30 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மனிதவள மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில், போட்டித் தோ்வுகள் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாநில சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் கலந்துகொண்டு, முதுகலை ஆசிரியா்கள், இளநிலை உதவியாளா்கள் தோ்வில் வெற்றி பெற்ற 30 பேருக்கு பணி நியமன ஆணைகளையும், 2025 -2026 ஆம் ஆண்டு மாநில, மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மொத்தம் 1,485 மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிப் பேசினாா்.

நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, மாவட்ட கல்வி அலுவலா்கள் தூத்துக்குடி முனியசாமி (இடைநிலை), தெட்சிணாமூா்த்தி (தொடக்கக் கல்வி), சிதம்பரநாதன் (தனியாா் பள்ளி), ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலா் மு.ச.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.