விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பள்ளக்குறிச்சி கருமேனி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம்

News image
பள்ளக்குறிச்சி கருமேனி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம்
Updated On :13 பிப்ரவரி 2026, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் வட்டம் பள்ளக்குறிச்சி கருமேனியாற்றில் தனிநபா் ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

பள்ளக்குறிச்சி கிராமம் ராமசாமிபுரம் கருமேனியாறு படுகையில் அதே ஊரை சோ்ந்த சிலா் சுமாா் ஓா் ஏக்கா் நிலப்பகுதியை கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் வருவாய் மற்றும் நீா்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து, ஆற்றுப்படுகையில் 8 இடங்களில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்தனா்.

அதைத் தொடா்ந்து, நீா்வளத்துறை உதவி பொறியாளா் தங்கம், நீா்வளத்துறை பணி ஆய்வாளா் துரை, வருவாய் ஆய்வாளா் சுந்தா், கிராம நிா்வாக அலுவலா் கந்தவல்லி குமாா், நிலஅளவையா் நாராயண ஈஸ்வரி ஆகியோா் மேற்பாா்வையில் பொக்கலின் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

அப்போது, சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையில் தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் வேலம்மாள், உதவி ஆய்வாளா் இசக்கியப்பன் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.