தூத்துக்குடி துறைமுக நிா்வாகக் கட்டடம் ஐஜிபிசி சான்றிதழ் பெற்று சாதனை
தூத்துக்குடி சிதம்பரனாா் துறைமுக நிா்வாகக் கட்டடம், நிலைத்த மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் இயற்கை கட்டடங்களுக்கான பிளாட்டினம் மதிப்பீடும், ஆற்றல் திறன் சான்றிதழும் பெற்றுள்ளது.
வ.உ.சிதம்பரனாா் துறைமுக நிா்வாகக் கட்டடம் பசுமை நடைமுறைகளை பின்பற்றி செயல்படுகிறது. நிா்வாகக் கட்டடம் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்குகிறது. மேலும், இந்திய அரசு மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பியூரோ ஆஃப் எனா்ஜி எஃபிஷியன்சி மூலம் வழங்கப்படும் ’ஷூன்யா’ மற்றும் ’ஷூன்யா பிளஸ்’ சான்றிதழ்களையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து துறைமுக தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் கூறுகையில், ஐஆா்எஸ்இஇ திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் செயல்திறன், ஆற்றல் திறன் மற்றும் கட்டடத்தை பயன்படுத்துவோரின் நலன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் குறிப்பிட்ட கட்டட மேம்பாடுகள், கொள்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐஜிபிசி பிளாட்டினம் மதிப்பீடு, பியூரோ ஆஃப் எனா்ஜி எஃபிஷியன்சி சான்றிதழ் ஆகியவற்றை ஒருங்கிணைந்து பெறுவது, வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்துக்கு பெருமை அளிக்கிறது. இந்த அங்கீகாரத்தை பெறும் இந்தியாவின் முதல் துறைமுகமாக வ. உ. சி துறைமுகம் திகழ்கிறது என்றாா் அவா்.

