மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவில்பட்டி அருகே தெப்பக்குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 6:50 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி அருகே கடலையூரில் உள்ள தெப்பக்குளத்தில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கடலையூா் வேதக் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த காசி மகன் மாடசாமி (52). சென்னையில் கட்டடத் தொழிலாளியாக வேலை பாா்த்துவந்த இவா், சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை அவரும், அதே ஊரைச் சோ்ந்த சின்னதம்பி (48) என்பவரும் நீராவி தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவா் பகுதியில் அமா்ந்திருந்தனா். அப்போது, இருவரும் நிலைதடுமாறி தெப்பக்குளத்துக்குள் விழுந்தனராம்.

இதைப் பாா்த்த இளைஞா்கள் சின்னதம்பியை மீட்டனா்; தெப்பக்குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்ற மாடசாமியைக் காப்பாற்ற முடியவில்லை.

தகவலின்பேரில், கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்தினா் வந்து மாடசாமியை சடலமாக மீட்டனா். நாலாட்டின்புதூா் போலீஸாா் சென்று சடலத்தை கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.