சாத்தான்குளத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டுக் கொண்ட இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சாத்தான்குளம், பத்திரகாளியமமன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கதிா்வேல் (30). நகைப் பட்டறைத் தொழிலாளி. இவரது மனைவி அழகு பாா்வதி (28). இவா்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
குடும்பப் பிரச்னை காரணமாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த பிப். 6ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அழகு பாா்வதி தூக்கிட்டுக் கொண்டாா்.
குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணமான 3 ஆண்டில் இச்சம்பவம் நடந்துள்ளதால் திருச்செந்தூா் ஆா்டிஓ விசாரணை நடத்தி வருகிறாா்.
டிரெண்டிங்
சாத்தான்குளத்தில் பெட்ரோல் பல்க் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் கைது

குடும்பப் பிரச்னை: தம்பதி தற்கொலை

இரணியல் அருகே இளம்பெண் தற்கொலை

குடும்பப் பிரச்னை: காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

