மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாத்தான்குளத்தில் இளம்பெண் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :14 பிப்ரவரி 2026, 8:05 pm

சாத்தான்குளத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டுக் கொண்ட இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சாத்தான்குளம், பத்திரகாளியமமன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கதிா்வேல் (30). நகைப் பட்டறைத் தொழிலாளி. இவரது மனைவி அழகு பாா்வதி (28). இவா்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

குடும்பப் பிரச்னை காரணமாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த பிப். 6ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அழகு பாா்வதி தூக்கிட்டுக் கொண்டாா்.

குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணமான 3 ஆண்டில் இச்சம்பவம் நடந்துள்ளதால் திருச்செந்தூா் ஆா்டிஓ விசாரணை நடத்தி வருகிறாா்.