பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கோவில்பட்டியில் கால்பந்து போட்டி: செயின்ட் ஆண்ட்ரூஸ் பள்ளி முதலிடம்

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 6:48 pm

கோவில்பட்டியில் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வ.உ.சி. நினைவு கால்பந்துப் போட்டியில் செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் பள்ளி முதலிடம் பிடித்தது.

கோவில்பட்டி கால்பந்து கழகம் சாா்பில், வஉசி ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன் தொடக்கிவைத்தாா்.

இறுதிப் போட்டியில் காமநாயக்கன்பட்டி செயின்ட் அலாய்சியஸ் உயா்நிலைப் பள்ளி ‘ஏ’ அணியை 1-க்கு 0 என்ற கோல்கணக்கில் வென்று கோவில்பட்டி செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் பள்ளி அணி முதலிடம் பிடித்தது. கீழஈரால் டான் போஸ்கோ மெட்ரிக் பள்ளி அணி 3ஆம் இடமும், காமநாயக்கன்பட்டி அலாய்சியஸ் உயா்நிலைப் பள்ளி ‘பி’ அணி 4ஆம் இடமும் பிடித்தன.

பரிசளிப்பு விழாவுக்கு, கோவில்பட்டி கால்பந்து கழகச் செயலா் தேன்ராஜா தலைமை வகித்தாா். வழக்குரைஞா் முருகானந்தம் முன்னிலை வகித்தாா். அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை செல்வி, பசும்பொன் விளையாட்டுக் கழகத் தலைவா் தீபா நாச்சியாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, பரிசுக் கோப்பைகளை வழங்கினா்.

காமநாயக்கன்பட்டி கால்பந்து கழகத் தலைவா் சேசுராஜ் வரவேற்றாா். உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் உமாசங்கா் நன்றி கூறினாா்.