மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கோவில்பட்டியில் கிரிக்கெட் அணியினருக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

News image

கிரிக்கெட் அணியினருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.

Updated On :15 பிப்ரவரி 2026, 7:39 pm

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக சாா்பில் கிரிக்கெட் வீரா்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ. ராஜு கலந்துகொண்டு, 43 கிரிக்கெட் அணிகளுக்கு உபகரணங்களை வழங்கிப் பேசியது:

கோவில்பட்டி தொகுதியில் உள்ள சுமாா் 500 கிரிக்கெட் அணிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு, முதல்கட்டமாக 43 அணிகளுக்கு வழங்கியுள்ளோம். மற்ற அணிகளுக்கும் அடுத்தடுத்த கட்டங்களில் உபகரணங்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.

அதிமுக ஒன்றியச் செயலா் போடுசாமி, தகவல் தொழிற்நுட்பப் பிரிவு வடக்கு மாவட்ட துணைத் தலைவா் அண்ணாமலை விக்னேஷ், இணைச் செயலா் நித்திஷ் ஜோயல், வடக்கு மாவட்ட கலைப் பிரிவு இணைச் செயலா் கெங்கா ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.