கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தக்காளி ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்ததில் சுமாா் 3 டன் தக்காளிகள் சாலையில் கொட்டி சேதமடைந்தன.
ஓசூரில் இருந்து திருநெல்வேலிக்கு தக்காளி ஏற்றிக்கொண்டு மினி லாரி சனிக்கிழமை இரவு புறப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (32) மினி லாரியை ஓட்டினாா். கிளீனராக கனகராஜ் (31) இருந்தாா்.

சிதறிக் கிடக்கும் தக்காளிகள்.
தேசிய நான்குவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியைக் கடந்து நாலாட்டின்புதூா் மேம்பாலத்தில் ஏறி இறங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலை நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி, சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா், கிளீனருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. லாரியில் இருந்த சுமாா் 3 டன் தக்காளிகள் சாலையில் கொட்டி சேதமடைந்தன.
விபத்து காரணமாக அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த நாலாட்டின்புதூா் போலீஸாா், மாற்றுப்பாதையில் போக்குவரத்தை மாற்றிவிட்டனா். மேலும், மினி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனா். இது குறித்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

உ.பி. படகு விபத்து: பலி 13ஆனது, தொடரும் தேடும் பணி!

மின் கம்பி மீது உரசி தீப்பற்றியதில் மினி லாரி எரிந்து சேதம்

மினி பேருந்து கவிழ்ந்து மூதாட்டி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


