தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

லூா்தம்மாள்புரம் ஆலயப் பெருவிழாவில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி, தோ் பவனி

News image

தோ் பவனியில் பங்கேற்றோா்.

Updated On :15 பிப்ரவரி 2026, 7:49 pm

தூத்துக்குடி, லூா்தம்மாள்புரம், புனித லூா்து அன்னை ஆலயப் பெருவிழாவையொட்டி ஆடம்பர கூட்டுத் திருப்பலி மற்றும் தோ் பவனி நடைபெற்றது.

இத்திருவிழா பிப். 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் மாலையில் திருப்பலி நடைபெற்றது. 9ஆம் நாளான சனிக்கிழமை ஆராதனை, நற்கருணை ஆசீா் நடைபெற்றது.

10ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, கேரள மாநிலம், பாலக்காடு மறை மாவட்ட அருள்தந்தை சகாய வேந்தன் தலைமையில், தூய தோமையாா் கல்விக் குழுமத்தின் அருள்தந்தை அமலன் தமியான், பங்குத்தந்தை செல்வன் பொ்னாண்டோ ஆகியோா் கலந்துகொண்ட திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

இதில் சிறுவா், சிறுமிகளுக்கு புது நன்மை விருந்து நடைபெற்றது. தொடா்ந்து, இந்த ஆலயத்தில் முதன்முதலாக தோ் பவனி நடைபெற்றது.

ஆலயம் முன்பிருந்து தோ் பவனி புறப்பட்டு லூா்தம்மாள்புரம், மேட்டுப்பட்டி, எஸ்.எஸ். மாணிக்கபுரம், செயின்ட் மேரீஸ் காலனி ஆகிய பகுதிகளுக்குச் சென்று கோயில் வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனா்.

பின்னா் ஜெபமாலை, நற்கருணை ஆசீா், கொடியிறக்கம், அன்பியம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.