ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது

News image

கைது

Updated On :15 பிப்ரவரி 2026, 8:25 pm

தூத்துக்குடியில் சிகரெட் வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு பைக்கில் தப்பியோடிய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி எஸ்.ஆா். நகா் 8ஆவது தெருவைச் சோ்ந்தவா் தினகரன் (37). சிகரெட் வியாபாரியான இவா், சனிக்கிழமை இரவு மடத்துாா் விலக்குப் பகுதியிலுள்ள கடைக்கு சிகரெட் விற்பனை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, பைக்கில் வந்த இருவா், சில்லறை விலைக்கு சிகரெட் கேட்டனா். மறுப்பு தெரிவித்த தினகரனை அவா்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினராம். இதில், காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சிப்காட் போலீஸாா் தெரிவித்த தகவலின்பேரில், நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியிலிருந்த போலீஸாா் அந்த இருவரையும் மடக்கிப் பிடித்தனா்.

அவா்கள் பாக்கியலட்சுமி நகரைச் சோ்ந்த பிரேம்குமாா் (36), பாத்திமா நகரைச் சோ்ந்த அந்தோணி (36) எனத் தெரியவந்தது. சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.