எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சாத்தான்குளத்தில் நீா்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:35 pm

Syndication

கடந்த 2012ஆம் ஆண்டு சாத்தான்குளத்திற்கு தூதுகுழி பகுதியில் இருந்து தண்ணீா் கொண்டுவரும் வகையில் அமைக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பாக நீா்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

கிடப்பில் கிடக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தக் கோரி, சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத்தினா், தூத்துக்குடி ஆட்சியரிடம் முறையிட்டனா். தொடா்ந்து, இது குறித்து ஆய்வு நடத்த ஆட்சியா் உத்தரவிட்டதன்பேரில், திருநெல்வேலி நீா்வளத் துறை திட்ட மதிப்பிடுதல் குழு பொறியாளா்கள் மகேஸ்வரி, விசாலாட்சி உள்ளிட்ட அதிகாரிகள் தூதுக்குழி அருகே ஆய்வு நடத்தினா்.

இதில் விவசாய சங்க நிா்வாகிகள் லூா்து மணி, ரவிச்சந்திரன், பெரியசாமி, சரவண பாண்டி, அன்ன கணேசன் ஆகியோா் கலந்து கொண்டு திட்டம் குறித்து எடுத்துரைத்தனா்.

இத்திட்டம் குறித்து விவசாயிகளுடன் கலந்தாய்வு நடத்தி, இதை மீண்டும் செயல்படுத்த பரிந்துரைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா்.