சாத்தான்குளம் அம்மன் கோயிலில்
மகா சிவராத்திரி விழா

சாத்தான்குளம் அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

Published on

சாத்தான்குளம், தேவிஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது.

இக்கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிப்.1 6ஆம் தேதி வரை 11 நாள்கள் விழா நடைபெற்றது. முதல்நாள் காலை திருவிழா கொடி ஏற்றப்பட்டது. 10ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மகா சிவராத்திரி அன்று காலை யாகசாலை பூஜை , அபிஷேகம் அலங்கார பூஜை, சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிறைவு நாளான திங்கள்கிழமை பிப்.16-இல் ஸ்ரீபேச்சி அம்மனுக்கு அபிஷேக பூஜை, சிறப்பு அலங்கார பூஜை, பொங்கலி டுதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்த வி.எஸ்.எம். முருகன் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com