தூத்துக்குடி
தூத்துக்குடி எஸ்.பி. பொறுப்பேற்பு
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சி.மதன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த என்.சிலம்பரசன், சென்னை சட்டம்-ஒழுங்கு பிரிவு உதவித் தலைமைக் காவல் இயக்குநராக நியமிக்கப்பட்டாா். அவருக்குப் பதிலாக திருநெல்வேலி மாநகர மேற்கு துணை ஆணையராக இருந்த சி.மதன், தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.
அவா், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், குற்றத் தடுப்பு, புலனாய்வு பணிகளில் தீவிரம் கவனம் செலுத்தப்படும். சட்டப் பேரவைத் தோ்தல் அமைதியாக நடைபெற தோ்தல் விதிகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும் என்றாா் அவா்.

