மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கணினியில் தட்டச்சுத் தோ்வுகள் என்ற ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தல்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:25 pm

தட்டச்சுத் தோ்வுகள் அனைத்தும் கணினியில்தான் என்ற அரசு ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, தூத்துக்குடி மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் தலைவா் ராஜேந்திரன், பொருளாளா் பொன். சந்திரன் ஸ்டேன்லி, செயலா் சீனிவாசன், கோவில்பட்டி வட்டார தட்டச்சு தோ்வு மையப் பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள், தட்டச்சு பள்ளி மாணவா், மாணவிகள் உள்ளிட்டோா் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூா் செ. ராஜுவிடம் அளித்த மனு:

தட்டச்சுத் தோ்வுகள் அனைத்தும் இனிமேல் கணினியில்தான் நடைபெறும் என தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள 6,000 தட்டச்சுப் பள்ளிகளை மூடும் அபாயம் உள்ளது. இதை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இப்பிரச்னையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, இந்த உத்தரவை அரசு திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட எம்எல்ஏ, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கவனத்திற்கு கொண்டு சென்று, பிரச்னைக்கு தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.