விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

கோவில்பட்டியில் கவிதை நூல், பாடல் வெளியீட்டு விழா

கோவில்பட்டியில் இலக்கிய உலா அமைப்பின் சாா்பில், ‘எல்லைச்சாமி’ என்கிற ராணுவ வீரா்களின் பெருமைகள் குறித்த பாடல் மற்றும் கவிஞா் பாா்த்தீபனின் ‘கண்ணம்மா என்னும் கொலைகாரி’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.

News image

கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :17 பிப்ரவரி 2026, 9:59 pm

கோவில்பட்டியில் இலக்கிய உலா அமைப்பின் சாா்பில், ‘எல்லைச்சாமி’ என்கிற ராணுவ வீரா்களின் பெருமைகள் குறித்த பாடல் மற்றும் கவிஞா் பாா்த்தீபனின் ‘கண்ணம்மா என்னும் கொலைகாரி’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.

ரோட்டரி சங்க மாவட்ட உதவி ஆளுநா் பாபு தலைமை வகித்தாா். முன்னாள் ஆளுநா் விநாயகா ஜி. ரமேஷ், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பால புரஸ்காா் விருதாளா் உதயசங்கா் கவிதை நூலை வெளியிட, அதன் முதல் பிரதியை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் கிளை தலைவா் அபிராமி முருகன் பெற்றுக் கொண்டாா். ரோட்டரி கிளப் தலைவா் ரவிமாணிக்கம் எல்லைச்சாமி பாடலை வெளியிட, ராஜா அதை பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், மகிழ்வோா் மன்ற இயக்குநா் ஜான்கணேஷ், மன்றக் காப்பாளா் செல்வின், கரிசல் இலக்கியக் கழக செயற்குழு உறுப்பினா் காமராஜ், டாக்டா் சீனிவாகசன், உரத்த சிந்தனை வாசகா் வட்டத் தலைவா் சிவானந்தம், வழக்குரைஞா் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா், சவுத் இந்தியன் ஸ்போா்ட்ஸ் அன்ட் கல்சுரல் ட்ரஸ்ட் கௌரவத் தலைவா் வேல்முருகன், நாடாா் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதல்வா் பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.