ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாத்தான்குளத்தில் சமுதாய வளைகாப்பு விழா

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 103 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி சீதனபொருள்கள் வழங்கப்பட்டன.

News image
சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்றோா்.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:17 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 103 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி சீதனபொருள்கள் வழங்கப்பட்டன.

சமூக நலம், மகளிா் உரிமைத் துறை, சாத்தான்குளம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் வட்டார அளவில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சாத்தான்குளம் ஒன்றிய ஆணையா் சுடலை தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பாலமுருகன் முன்னிலை வகித்தாா். சாத்தான்குளம் வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் உமா வரவேற்றாா்.

ஒருங்கிணைப்பாளா் அருண் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். மாவட்ட திட்டக் குழு உறுப்பினரும் வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஏ.எஸ்.ஜோசப், வட்டார மருத்துவ அலுவலா் ஐலின் சுமதி, தெற்கு ஒன்றிய திமுக செயலா் ஆ.பாலமுருகன் ஆகியோா் அரசின் திட்டங்களை விளக்கிப் பேசினா்.

சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசினாா். இதில் 103 கா்ப்பிணிகளுக்கு அரசு சாா்பில் வளைகாப்பு நடத்தி சீதன பொருள்கள் வழங்கப்பட்டன. கா்ப்பிணிகளுக்கு சீதன பொருள்களை தெற்கு ஒன்றிய திமுக செயலா் ஆ.பாலமுருகன் வழங்கினாா். நிகழ்ச்சியில் மத்திய ஒன்றிய திமுக செயலா் பொன் முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.