பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியா்கள் புதன்கிழமை (பிப்.18) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனா்.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாா்க் மேலாளா் அலுவலகம் முன், டாஸ்மாக் ஊழியா்கள் வேலைநிறுத்தம் தொடா்பாக வாயில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஏஐடியூசி டாஸ்மாக் பணியாளா் சங்க மாநில துணைத் தலைவா் நெப்போலியன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், பணி நிரந்தரம், ஓய்வூதியம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் உள்ள 123 டாஸ்மாக் மதுபானக் கடைகளும் புதன்கிழமை திறக்கப்படாது என அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக அறிவித்தன.
தொடர்புடையது

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
வேட்புமனு பரிசீலனை: தூத்துக்குடி மாவட்டத்தில் 121 மனுக்கள் ஏற்பு, 67 மனுக்கள் தள்ளுபடி

சென்னையில் மாா்ச் 11-இல் டாஸ்மாக் பணியாளா்கள் உண்ணாவிரதம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


